திருக்குறள்

1162.

கரத்தலும் ஆற்றேன்இந் நோயைநோய் செய்தார்க் குரைத்தலும் நாணுத் தரும்.

திருக்குறள் 1162

கரத்தலும் ஆற்றேன்இந் நோயைநோய் செய்தார்க் குரைத்தலும் நாணுத் தரும்.

பொருள்:

காதல் நோயை என்னால் மறைக்கவும் முடியவில்லை; இதற்குக் காரணமான காதலரிடம் நாணத்தால் உரைக்கவும் முடியவில்லை.

மு.வரததாசனார் உரை:

இக் காமநோயைப் பிறர் அறியாமல் முற்றிலும் மறைக்கவும் முடியவில்லை, நோய் செய்த காதலர்க்குச் சொல்வதும் நாணம் தருகின்றது.

சாலமன் பாப்பையா உரை:

இந்தத் துன்பத்தை என்னால் மறைக்கவும் முடியவில்லை. துன்பத்தைத் தந்த இவருக்கு (எழுத்தில் தொலைபேசியில்) இதைச் சொல்லவும் வெட்கமாக இருக்கிறது.